பாஜக ஆளும் உத்தரப்பிரதே சம் மாநிலம் ஹாத்ரஸ் மாவட் டத்தில் உள்ள புல்ராய் கிரா மத்தில் கடந்த ஜூலை 2 அன்று போ லிச்சாமியார் “போலே பாபா” பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 121 பேர் உயிரிழந்தனர்.
இந்த வழக்கை விசாரிக்க உத்தரப் பிரதேச மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. விசாரணைக்குப் பின்னர் ஹாத்ரஸ் மாவட்ட நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரி கையில் நிகழ்வை ஏற்பாடு செய்த தேவ் பிரகாஷ் மதுகர் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 80,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு 2.50 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக 3,200 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரி கையில் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை.
இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கி றதா என்பது குறித்து ஆராய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமை யில் மூன்று நபர் கொண்ட விசா ரணை ஆணையத்தையும் உ.பி., அரசு அமைத்துள்ளது என்பது குறிப்பி டத்தக்கது.